↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்திய மற்றும் உலகஅளவில் தனக்காக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
அதில் ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் தான் அதிகமாக உள்ளனர்.
இந்நிலையில் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா சௌத்ரியை கரம் பிடித்தார். ரெய்னாவின் இந்த திருமணச் செய்தியை கேட்டு பல ரசிகைகளுக்கு ஹார்ட் அட்டக்கே வந்துவிட்டது.
இது பற்றி ஹரினி என்ற ரசிகை கூறுகையில், ரெய்னா பேட்டை எடுத்து மைதானத்திற்குள் வந்தாலே என்னை கண்ட்ரோல் செய்ய முடியாது.
நான் ரெய்னாவின் தீவிர ரசிகை. அவரது ஆட்டத்தை பார்க்க பல நாள் கல்லூரிக்கு விடுப்பு போட்டு இருக்கிறேன்.
ரெய்னா எப்போ களத்துல இறங்குவாருனு பார்த்துக் கொண்டே இருப்பேன். அவரது ஸ்ட்ரோக் ஆஃப் பேட்டிங்க் எனக்கு ரொம்ப புடிக்கும்.
அவர் அவ்வளவு அழகாக பந்தை அடிப்பார். ஆனால் அவரின் கல்யாண செய்தியை கேள்விபட்டதும் ஷாக் ஆகிட்டேன். இவ்வளவு சின்ன வயசுல கல்யாணமா? என்று சோகம் கலந்த ஏக்கத்துடன் கூறியுள்ளார்.
அதே போல நிவேதா என்ற ரசிகை கூறுகையில், "எனக்கு ரெய்னாவின் ஆட்டத்தை விட அவரது க்யூட்னெஸ்தான் பிடிக்கும். அவர் அவ்வளவு அழகு.
என்னான் அவரருடைய கல்யாண செய்தியை ஜீரணிக்கவே முடியவில்லை. என்னை ஏமாத்திட்டீங்க ரெய்னா. அவர் என்ன பண்ணுனாலும் க்யூட். அடுத்த ஜென்மத்தில் என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க என்று பொய் கண்ணீர் வடித்த படியே கூறியுள்ளார்.
பின்னர் பிரியங்கா குடுத்து வைச்சவங்க என்று கூறி, ரெய்னாவிற்கு திருமண வாழ்த்துகளை ரசிகைகள் தெரிவித்துக் கொண்டனர்.
ரெய்னாவின் திருமணத்திற்கு முன்பு ரசிகை ஒருவர், அவர் இருக்கும் ஹொட்டலுக்கு வெளியே, அவரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று காத்துக் கிடந்ததும் நினைவிருக்கலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top