↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad திருநங்கைகள் எதிர்ப்பு பயம் - பட டைட்டில் திடீர் மாற்றம்
விருமாண்டி, விஸ்வரூபம், தலைவா, கொம்பன் என சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு டைட்டில் மற்றும் கதையை எதிர்த்து சில அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன. இதனால் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் தயாரிப்பாளர்கள் படாதபாடுபடுகின்றனர். ‘என்னமோ நடக்குது‘ படத்தில் இணைந்த விஜய் வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, தயாரிப்பாளர் வி.வினோத்குமார் அடுத்து ‘சிகண்டி' படத்தில் இணைந்திருக்கின்றனர். 

இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் பட டைட்டில் மாற்றப்பட்டது. இதுபற்றி இயக்குனர் ராஜபாண்டி கூறும்போது,‘சிகண்டி என்பது மகாபாரதத்தில் வரும் ஒரு திருநங்கை கதாபாத்திரம், சமீபகாலமாக டைட்டில், கதை போன்றவற்றை காரணம்காட்டி பல தமிழ் படங்களுக்கு அடிக்கடி சிக்கல் ஏற்படுகிறது. 

சிகண்டி படத்தை பொறுத்தவரை திருநங்கை பற்றிய படம் இல்லை. இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி முறை தேவை என்பதை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. ஆனாலும் இந்த டைட்டிலுக்கு சிலர் எதிர்ப்பு கிளப்பக்கூடும் என்று எண்ணியதால் அதை மாற்ற முடிவு செய்தோம். சிகண்டி என்ற டைட்டிலை தற்போது அச்சமின்றி என மாற்றி இருக்கிறோம். சமுத்திரக்கனி, சிருஷ்டி டாங்கே உள்பட பலர் நடிக்கின்றனர்.இவ்வாறு இயக்குனர் ராஜபாண்டி கூறினார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top