↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ' உறுமீன்' , ‘சென்னை’ பட சர்ச்சை - பாபி சிம்ஹா டைரக்டர் புலம்பல்
தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா நடிக்கும் படம் ‘உறுமீன்' . இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். இயக்குனரிடம், ‘உங்க படத்தில் நடிக்க வந்த வேலுபிரபாகரன் நடிக்க மறுத்து வெளியேறிவிட்டாராமே உங்களுக்குள் என்ன தகராறு? என்றதும் புலம்பி தீர்த்தார் இயக்குனர். " கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் சொந்த விஷயம். அதை தொழிலில் காட்டக்கூடாது. எம்.ஆர்.ராதா, சத்யராஜ் போன்றவர்களும் கடவுள் மறுப்பாளர்கள்தான். ஆனால் படத்தில் சாமி பக்தர்களாக நடித்தனர். அப்படித்தான் வேலு பிரபாகரனுக்கும் கதாபாத்திரம் தரப்பட்டது. சொந்த விருப்பு வெறுப்பை தொழிலில் காட்டக்கூடாது. இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் ஷூட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நடிக்க முடியாது என்று வெளியேறிவிட்டார்.

 அவரும் ஒரு இயக்குனர்தான். படப்பிடிப்பு ரத்தானால் தயாரிப்பாளருக்குத்தான் நஷ்டம் என்று அவருக்கும் தெரியும். தெரிந்தும் ஏன் அப்படி செய்தார் என அவரிடம் கேளுங்கள். கடைசி நேரத்தில் சார்லியை அழைத்து நடிக்க வைத்தேன்‘ என்றார்.அதேபோல் பாபி சிம்ஹாவிடம்,‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, இப்போது அப்படத்தில் நடிக்க லாபத்தில் பங்கு கேட்கிறீர்களாமே‘ என்றதும் அவரும் சூடானார். ‘என்ன நடந்தது என்று தெரியாமல் கேட்காதீர்கள். குறும்படம் எடுப்பதாக கூறிவிட்டு இப்போது அதை முழு படமாக எடுக்கிறார்கள். அதை கேட்டீர்களா?'  என்று கோபத்தில் முகம் சிவந்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top