↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad மேற்கிந்திய தீவுகளின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு சுனில் நரைன் பந்துவீச்சு முறை சந்தேகத்துக்குரியதாக இருந்ததால் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த மாதம் லப்பரோ பல்கலைக்கழகத்தில் ஐசிசி நடத்திய சோதனையில் நரைனின் பந்துவீச்சு சரியான உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் அவர் மீண்டும் சென்னையில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பந்துவீச்சு சோதனை மையமான சென்னை, ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் சுனில் நரைன் பந்துவீச்சு குறித்து சோதனை நடத்தப்பட்டது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி அவரின் பந்து வீச்சு சரியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வரும் 8ந் திகதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் சுனில் நரைன் கொல்கத்தா அணியில் களமிறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top