சமந்தா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில், “சமயங்களில் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என கட்டுப்படுத்த முடியாமல் கோபத்தைத் தூண்டுகிறது,” என பதிவு ஒன்றைப் போட்டிருந்தார்.
ஏன் இந்த டுவிட்டை போட்டார், சமந்தாவை யார் கோபப்படுத்தியது என்று ரசிகர்கள் புரியாமல் தலையை பிய்த்து கொண்டிருந்தனர். தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. சமந்தா தற்போது த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அடா ஷர்மாவும் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சமந்தா, அடா ஷர்மாவிடம் ஜோக் ஒன்றைச் சொல்லியிருக்கிறார். உடனே அடா, சமந்தாவைப் பற்றி ஒரு கமெண்ட் அடிக்க, அதைக் கேட்டதும் மொத்த யூனிட்டும் அதிர்ச்சியடைந்து சைலன்டாகிவிட்டார்களாம்.
சமந்தா கண்ணீர் விட்டு அழுதே விட்டாராம். உடனே, இயக்குனர் அடாவை, சமந்தாவிடம் மன்னிப்பு கேள் என்று சொன்னாராம். அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்ல, அடாவை செட்டை விட்டு வெளியேற சொல்லி விட்டாராம் இயக்குனர்.
இதை மனதில் வைத்துதான் சமந்தா டுவிட்டரில் அது போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார் என்று டோலிவுட் வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.