↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நடிகர் சங்க பிரச்னை குறித்த கேள்விக்கு விஷால் பதிலளிக்கையில், நடிகர் சங்கத் தலைவர்களில் சரத்குமார் ராதாரவி,  அவர்கள் இருவர் மீது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவர் மீதும் நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். நடிகர் சங்க இடம்  19 கிரவுண்ட்.. ஒருகாலத்தில் எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற பலரது வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி  சங்கம் வளர்ந்து கட்டடம் உருவானது. அந்த இடம் இன்று மயானம் போல காட்சி தருகிறது.

அதைக் கட்டச்சொல்வது என் தனிப்பட்ட நலன் கருதியல்ல சுமார் 2500 சிரமப்படும் நடிகர்களுக்காத்தான்.அவர்களின் குடும்பங்களின் சந்தோஷத்துக்கு ஏதாவது வழிபிறக்காதா என்கிற எண்ணத்தில்தான்.


எனக்கும் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஒன்றுமில்லை. சங்கத்தின் பொறுப்பிலுள்ளவர்கள், பலபேர் மத்தியில் என்னை நாய் என்கிறார்கள் ராதாரவி இழிவாகப்பேசினார். என்னைக் கடனை அடைக்கச் சொன்னார் நடிப்பைக் கற்றுக் கொள்ளச் சொன்னார். ஒவ்வொன்றாக நான் முடிப்பதற்குள் அவர்கள் ஏப்பம் விட்டு விடுவார்கள்.

2500 குடும்ப மகிழ்ச்சிக்காகத்தான் இதைப் பேசுகிறேன். ஊழல் இல்லை என்கிறார்கள் .ஏன் அவர்கள் சொன்ன தேதியில்கூட கட்டடம் கட்டவில்லை. இந்த முறையாவது தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடக்கட்டும் .நாடக நடிகர்களில் தனிப்பட்ட யாரையும் எனக்குத் தெரியாது.ஆனாலும்  அவர்களுக்காகப் போராடுகிறோம். எனக்கு நாற்காலி ஆசை இல்லை. பொறுப்பு கொடுத்தால் ஏற்றுச் செயல்படுவேன்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top