↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அரியானாவை சேர்ந்த தேசிய குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் கல்வி கட்டணம் செலுத்த வழியில்லாமல் வீட்டு வேலை செய்து படித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் கைத்தால் பகுதியை சேர்ந்த ரிஷு(Rishu) மிகச்சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை. கடந்த 2014 ஆம் ஆண்டு அரியானாவில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்.
கடந்த வருடம் குவாலியரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் இவர் பங்கேற்றார்.
தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வரும் ரிஷு, தனது சகோதரருடன் மிகுந்த ஏழ்மையான நிலையில் வசித்து வருகிறார். ரிஷுவின் சகோதரர் அங்குள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது வருமானம் உணவு உண்பதற்கு மட்டுமே சரியாக உள்ளது.
இதனால் ரிஷு அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் படித்து வருகிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top