↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


நடிகர் விஷால் தனது ரசிகர்கள் மன்ற உறுப்பினர்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக சென்னையில் நடைபெற்றது.  சென்னை வானகரத்தில் உள்ள கந்தசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து விஷால் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடிகர் விஷால் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியதோடு தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கம் மற்றும் ரசிகர்களுக்கான அதிகாரபூர்வ இணையதளம் ஒன்றையும் தொடங்கி வைத்தார். 

இந்த கூட்டத்தில் மிகவும் உணர்ச்சிகரமாக பேசிய விஷால், தான் ஏற்கனவே கூறியபடி நடிகர் சங்கத்திற்காக சொந்தமாக கட்டிடம் ஒன்றை கட்டி முடித்த பின்னர் தான், தனது திருமணம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

ரசிகர் ஒருவரின் குழந்தைக்கு 'வெற்றி' என்று பெயர் சூட்டிய விஷால், அந்த குழந்தைக்கு தங்க மோதிரம் ஒன்றையும் பரிசாக கொடுத்தார்.

விஷால் தற்போது சுசீந்திரனின் இயக்கத்தில் 'பாயும் புலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார். மேலும் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top