↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
24வது மாடியில் இருந்து குதிக்குமாறு கேப்டன் டோணி கூறினால் அவ்வாறே செய்வேன் என்று பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் கிரிக்கெட் உலக பயணம் கரடுமுரடாக உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது முழங்காலில் காயம் ஏற்பட்டு நாடு திரும்பினார். தற்போது நலமாக உள்ள அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தயாராக உள்ளார்.
இந்நிலையில் கிரிக்கெட் உலக பயணம் பற்றி இஷாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
2011ம் ஆண்டு நான் உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணியில் தேர்வாகவில்லை. 2015ல் நான் தேர்வாக அதிக வாய்ப்புகள் இருந்தது. ஆனல் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. நான் மிகவும் வருத்தம் அடைந்த நேரத்தில் மஹிபாய்(டோணி) எனக்கு ஆறுதல் கூறினார்.
நீ 24வது மாடியில் இருந்து குதிக்க வேண்டும் என்று கேப்டன் மஹிபாய் கூறினால் நான் சற்றும் யோசிக்காமல் குதிப்பேன். யாருக்குமே காயம் அடைவது பிடிக்காது. ஆனால் என்ன செய்ய முடியும். அதனால் அதை பற்றி கவலைப்பட்டு பயனில்லை.
பந்து வீச எனக்கு மிகவும் பிடிக்கும். சும்மா இருக்கும் நேரங்களில் கூட நான் பந்துவீசி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பேன். நான் ஒரு நாளில் 10 ஓவருக்கு மேல் பந்து வீசக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நான் 10க்கும் மேற்பட்ட ஓவர்களுக்கு பந்து வீசுகிறேன்.
நான் குணமடைந்துவிட்டதால் தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளேன். காயத்தோடு விளையாடுபவன் நான் அல்ல. உலகக் கோப்பை போட்டியை மிஸ் செய்த என்னால் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடாமல் இருக்க முடியும். உலகக் கோப்பையை விட வேறு எதுவும் பெரியது அல்ல.
இதனை எல்லாம் இந்த ஐபிஎல் போட்டியில் செய்ய வேண்டும் என்று நான் எனக்கு இலக்கை நிர்ணயிப்பது கிடையாது. நிலைமைக்கு ஏற்றவாறு விளையாடுவது தான் நல்லது. நான் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். எந்த சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்.
ஹைதராபாத் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். டிரென்ட் பவ்ல்ட், பிரவீன் குமார் இருப்பது எங்களுக்கு பலம். நாங்கள் இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம். டேல் ஸ்டெய்ன், புவனேஸ்வர் குமார் என்ன செய்வார்கள் என்று அனைவருக்கும் தெரியும். பயிற்சியின்போது கூட புவி சிற்பபாக ஆடி வருகிறார்.
Home
»
dhoni
»
sports
»
sports.tamil
» 'தல' டோணி சொன்னா 24வது மாடியில் இருந்து கூட யோசிக்காம குதிப்பேன்: இஷாந்த் சர்மா
Recent Posts
டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் [...]
டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி
இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் வ[...]
உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந[...]
சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய[...]
இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அ[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.