↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜீத்தின் 'என்னை அறிந்தால்' படத்தின் டீசர் வெளியானதற்கே அஜீத் ரசிகர்கள் டுவிட்டர் இணையதளத்தை குத்தகைக்கு எடுத்து கொண்டாடி வரும் நிலையில் இந்த படத்தின் ஒரே ஒரு பாடலை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிட கவுதம் மேனன் முடிவு செய்துள்ளார். எனவே தற்போது குத்தகைக்கு எடுத்துள்ள டுவிட்டர் இணையதளத்தை அஜீத் ரசிகர்கள் தங்களுக்கே சொந்தமாக்கிவிடுவார்களோ? என்ற அச்சத்தில் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து 'என்னை அறிந்தால்' டிரெண்டு டுவிட்டர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டிரெண்டை உடைக்க வேண்டும் என விஜய் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் விஜய் 58 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை கூடிய விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளார். படத்தின் டைட்டிலை இன்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளார். 'கருடா' அல்லது 'போர்வாள்' என்ற இரண்டு டைட்டிலை இயக்குனர் சிம்புதேவன் தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், இந்த இரண்டில் ஒன்றை விஜய் விரைவில் தேர்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் 'என்னை அறிந்தால்' ரிலீஸ் தினத்தில் விஜய் 58 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் இந்த அதிரடி முடிவால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். அஜீத் ரசிகர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டுவிட்டரை எப்படியாவது மீட்க விஜய் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை பலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top