↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் ஹீரோ வேடங்களுக்கு காத்திருக்காமல் இளம் ஹீரோக்களுக்கு அண்ணன் ரோலிலும் தன்னை இணைத்துக்கொள்கிறார். இதனால் அவரது வண்டி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. ரோஷக்கார வெங்கடேஷுக்கு சமீபத்தில் ஐதராபாத் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. 

பிலிம் நகரில் உள்ள பிளாட்டில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக நீங்கள் கட்டிடம் கட்டி இருப்பது தவறு. உடனடியாக அதற்கு பதில் அளிக்க வேண்டும்' என்று அதில் குறிப்பிட்டிருந்தது. 15 நாட்களுக்குள் பதில் அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. உடனடியாக அதற்கு வெங்கடேஷ் பதில் அளித்தார். 

இன்னும் ஒருபடி மேலே சென்று சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் என்று கார்ப்பரேஷன் சுட்டிக்காட்டிய கட்டிடத்தை உடனடியாக இடித்து தரைமட்டம் ஆக்கினார். எள் என்றால் எண்ணெயாக மாறிய வெங்கடேஷ் பற்றிய பேச்சுதான் இப்போது டோலிவுட் வட்டாரம் முழுவதும் சூடான டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top