↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பாகிஸ்தான் பெஷாவர் தாக்குதலில் 132 மாணவர்கள் கொல்லப்பட்ட நிலையிலும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பாடசாலையில் புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த மாணவர்களை கொன்று குவித்தனர். இதில் 132 மாணவர்கள் உட்பட மொத்தம் 145 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியை (அபுதாபி) தள்ளி வைக்க வேண்டும் என, கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல தரப்பிலும் இருந்து கோரிக்கை எழுந்தது.
சமீபத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஹியுஸ் பந்து தாக்கி மரணம் அடைந்த மறுநாள், இந்த இரு அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ரத்து செய்யப்பட்டது.
இப்போது 132 மாணவர்கள் பலியான நிலையிலும், அபுதாபியில் நேற்று போட்டி வழக்கம் போல நடந்தது. இதற்கு முன் இரு அணி வீரர்களும் இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில், ‘‘ எங்களால் முடிந்தவரை நான்காவது ஒருநாள் போட்டியை தள்ளிவைக்க முயற்சி செய்தோம். ஆனால் தொலைக்காட்சி ஔிபரப்பு ஒப்பந்தம் காரணமாக போட்டியை நடத்த வேண்டியதாயிற்று,’’ என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top