↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்திய அணித்தலைவர் டோனி பற்றிய தந்தையின் கருத்துக்கும், தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங்.
இந்திய அணியில் தொடர்ந்து தனது மகன் இடம்பெறாததற்கு டோனி தான் காரணம் என யுவராஜ் சிங்கின் தந்தை குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், டோனி ஒரு சர்வாதிகாரி. ராவணனின் கதை முடிந்தது போல் டோனியின் கதையும் ஒரு நாள் முடிவுக்கு வரும். அப்போது அவர் கையில் காசின்றி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார் என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் தனது தந்தையின் கருத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், டோனி தலைமையில் விளையாட எனக்கு விருப்பம். டோனியை நேரில் சந்திக்கும் போது, அவர் தந்தையானதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top