↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
போக்குவரத்து விதிகளை மீறிய இந்திய அணித்தலைவர் டோனிக்கு ரஞ்சி பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.
பைக் பிரியரான டோனி மிகவும் பெறுமதியான பலதரப்பட்ட பைக்குகளை வைத்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, ராஞ்சியில் உள்ள அவரின் வீட்டில் மட்டும், 16 பைக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர, சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு வந்தால், அவர் ஜாலியாக பயணிப்பதற்காக, அந்த நகரங்களிலும், தலா இரண்டு பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தன்னிடம், விலையுயர்ந்த பல பைக்குகள் இருந்தாலும், முதல் முதலாக, வாங்கிய பைக் மீது தான், அவருக்கு ரொம்ப பிரியம். அதனை அவ்வப்போது ஓட்டிப் பார்த்து மகிழ்வார் டோனி.
அதற்கு முன்னர் ஆசையாக தனது சொந்த ஊரில் நம்பர் பிளேட் இல்லாத புல்லட்டில் ஜாலியாக வலம் வந்து பொலிஸில் சிக்கியுள்ளார்.
இதற்கு தண்டமாக 450 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை ராஞ்சியின் போக்குவரத்து பொலிஸ் கண்காணிப்பாளர் கார்த்திக்கும் உறுதிபடுத்தியுள்ளார்.
ராஞ்சியில் நம்பர் பிளேட் இல்லாமல் மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அதன்படி கண்காணிக்கப்பட்டதில் டோனி ஓட்டிய புல்லட்டில் நம்பர் பிளேட் இல்லை எனினும் நாங்கள் அவருக்கு அபராதம் விதித்து உள்ளோம்.
டோனி பதிவு செய்யபட்டாத மற்றும் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை கண்காணிப்பதற்கு டோனி ஆதரவு தெரிவித்து உள்ளார்.
டோனி ராஞ்சி நகரில் பொலிஸாருக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக வாக்குறுதி அளித்தது உள்ளார் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top