↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள 'இது என்ன மாயம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற நிலையில் இந்த படம் குறித்து செய்தியாளர்களிடம் இயக்குனர் விஜய் மனம் திறந்து சில விஷயங்களை கூறியுள்ளார்.

'தமிழ் சினிமா எத்தனையோ வகையான காதல் திரைப்படங்களை கொடுத்திருந்தாலும், அவற்றில் இருந்து மிகவும் வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இது என்ன மாயம்' திரைப்படம் என்று கூறிய ஏ.எல்.விஜய், காதலில் விழும் இந்த படத்தின் ஹீரோ, இரண்டு வெவ்வேறு விதத்தில் காதலை சந்திப்பதாகவும், இந்த படத்தின் முதல் பாதி முழுவதும் மகிழ்ச்சியான காதல் சம்பவங்களும், பின்பாதியில் சோகமயமாகவும் இருக்கும் என்று கூறினார்.

இந்த படம் ரிலீஸான பின்னர் விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷின் கெமிஸ்ட்ரி பரபரப்பாக பேசப்படும் என்று கூறிய விஜய், 'கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், அவர் அறிமுகமாகும் முதல் தமிழ்ப்படம் இதுதான்' என்றார்.

இந்த படத்தில் காவ்யா ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top