முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் ஏப்ரல் 1ம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது.
அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இப்படத்துக்கு தடை கேட்ட கிருஷ்ணசாமி சார் வெறும் அம்பு தான். அவர் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அதற்கான வழிமுறைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அவருடைய எதிர்ப்பால் சுமார் 120 திரையரங்குகள் குறைவாகத் தான் வெளியானது. அதோடு, கிருஷ்ணசாமி சாரின் எதிர்ப்பால் வெளிநாட்டுக்கு சரியான நேரத்தில் எங்களால் படத்தை அனுப்பமுடியவில்லை.
படத்தை தாமதமாக அனுப்பினால், அதற்கான பணத்தை கழித்துக் கொண்டுதான் கொடுப்போம் என்று ஒப்பந்தத்தில் இருக்கிறது. அந்த பணத்தையும் ஒப்பந்தப்படி கழித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு தான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்” என்றார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.