
தமிழில் கடந்த வருடம் வெளிவந்து பாக்ஸ் ஆபிசில் ஹிட்டான படம் "கத்தி". இப்படத்தில் விஜய்-சமந்தா நடித்திருந்தனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். தமிழில் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வமானார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நல்லமல்லப்பு ஸ்ரீனிவாஸ் மற்றும் தாகூர் மது ஆகியோர் இணைந்து வாங்கினர்.இதைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கும் வாய்ப்பை தெலுங்கு முன்னணி இயக்குனரான கோபிசந்துக்கு வழங்கப்பட்டது.
கத்தியில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. முதலில் இந்த படத்தில் நடிக்க பவன் கல்யாணை அணுகியதாகவும், பின்னர், அவர் இதில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், கத்தி தெலுங்கு ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.ஜூனியர் என்.டி.ஆர். ரீமேக் படத்தில் நடிக்கும் முதல் படம் இது. மேலும், சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.
ராம் வழங்கும் "பண்டகோ செஸ்கோ" என்ற படத்தின் இயக்கத்தில் கோபிசந்த் தற்போது பிசியா உள்ளார். இப்படத்தை மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு பிறகு கத்தி ரீமேக்கை இயக்குவார் என தெரிகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.