↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இலங்கை மீதான அதிருப்தி, தமிழக மக்களுக்கு இன்னும் குறையாததால் நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்தில் விளையாட முடியாது.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையால் தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக கொந்தளிப்பு இருந்து வருகிறது.
இதன் காரணமாக, கடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நடந்த போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கவில்லை.
வரும் 8ம் தேதி நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கவுள்ளன.
இந்த தொடரிலும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க முடியாது.
இலங்கை வீரர்கள் ஏஞ்சலா மத்யூஸ் (டெல்லி) திசர பெரேரா (பஞ்சாப்) லஷித் மலிங்கா (மும்பை ) அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.
சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொதுச்செயலாளர், ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஐ.பி.எல். நிர்வாகம், இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top