
விஷால் தற்போது தன் ரசிகர்களுடன் உடனக்குடன் தொடர்பில் இருக்க விரும்பி, தன் ரசிகர்களை சந்தித்துள்ளார். இதில் ’நான் இங்கு இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் நீங்கள் தான்’ என்று கூறினார்.
மேலும், விஷால் பேசுகையில் ‘நாடக நடிகர்களில் தனிப்பட்ட யாரையும் எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர்களுக்காகப் போராடுகிறோம். எனக்கு நாற்காலி ஆசை இல்லை. பொறுப்பு கொடுத்தால் ஏற்றுச் செயல்படுவேன்.
என் தரப்பில் நியாயமில்லாமலா சிவகுமார், நாசர், ஆர்யா, ஜீவா, பொன்வண்ணன், மன்சூர்அலிகான், ஆனந்தராஜ் போன்றவர்கள் நான் சொல்வதை ஆதரிக்கிறார்கள். எனக்காக அல்ல நியாயத்துக்காக தான் அவர்களும் குரல் கொடுக்கிறார்கள்’ என அதிரடியாக பேசியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.