↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad லா லிகா லீக் கால்பந்து சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் ரியல் மாட்ரிட் 9-1 என அபார வெற்றி பெற்றது
நேற்றைய போட்டியில் ரியல் மாட்ரிட்- கிரனாடா அணிகள் நேற்று மோதின.
இந்த போட்டியில் ரியல் மாட்ரிட் ஆட்டத்திற்கு கிரனாடாவால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் 9-1 என அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் முன்னணி வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ 5 கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டம் தொடங்கிய 25-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரேத் பலே முதல் கோலை அடித்து அணியின் எண்ணிக்கையை தொடங்கி வைத்தார்.
30-வது நிமிடத்தில் கிறிஸ்டியானா ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். அடுத்த 6-வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். அதன்பின் 2 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் 8 நிமிடத்திற்குள் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனைப் படைத்தார்.
ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் ரியல் மாட்ரிக் முதல் பாதி நேரத்தில் 4-0 என முன்னிலை பெற்றது. 2-வது பாதி நேரத்திலும் ரியல் மாட்ரிட் அணியில் கோல் பசி அடங்கவில்லை. அந்த அணியின் பென்சிமா 52-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அடுத்த 2-வது நிமிடத்தில் ரொனால்டோ மேலும் ஒரு கோல் அடித்தார். அடுத்த 2-வது நிமிடத்தில் பென்சிமா ஒரு கோல் அடித்தார். இதனால் 56-வது நிமிட ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் வீரர்கள் 7 கோல்கள் அடித்தது. இதற்கு கிரனாடா 74-வது நிமிடத்தில் பதில் கோல் ஒன்று அடித்தது.
83-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு மேலும் ஒரு கோல் அடித்தது. கடைசி 89-வது நிமிடத்தில் ரொனால்டோ மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 9-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரொனால்டோ மொத்தமாக 5 கோல் அடித்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top