↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கால் முறிவு அடைந்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல்காந்தி திடீரென, நீண்ட விடுமுறைக்கு செல்வதாக அறிவித்தில் இருந்து அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தும், அவர் திடீரென மாயமானது குறித்தும் பல தகவல்கள், வதந்திகள் ரூபத்தில் பரவி வருகின்றன. ராகுல் மியான்மரில் ஓய்வு எடுப்பதாக கூறப்பட்டது. பின்னர் பிரான்ஸ், அடுத்து கிரீஸ் என தகவல்கள் பல வகைகளாக பரவின.

இதற்கிடையில், காதலியை கரம்பிடிக்க ராகுல் சென்றுள்ளதாகவும், நாடு திரும்பும்போது மனைவியுடன் வருவார் என்றும் ஒரு தகவல் வெளியாகி சூட்டை கிளப்பியது. இந்நிலையில், ராகுல் காந்தி உருகுவேயில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், இதில் அவர் படுகாயம் அடைந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. ராகுல்காந்தி, தனது டிராவல் இன்சூரன்ஸ் மூலம், சிகிச்சை பெற்றதாகவும், அந்த இன்சூரன்ஸ் நிறுவன வட்டாரங்கள் மூலமாக அவர் உருகுவேயில் சிகிச்சை பெற்றுவருவது கண்டறியப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ராகுல் அலுவலக வட்டரங்களும், காங்கிரஸ் புள்ளிகளும், இதை உறுதி செய்ய மறுத்துவிட்டனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top