↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகை ஸ்ருதிஹாசனை பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு பரபரப்பான செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் மீது சிவில் வழக்கு தொடர வேண்டிய சூழ்நிலையை உண்டாக்கியது.  

தற்போது ஆந்திர மாநில அமைச்சர் ஒருவர் ஸ்ருதிஹாசனை அழ வைத்த சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சில தினங்களுக்கு முன்பு ஐதராபாதத்திலிருந்து திருப்பதி செல்லும் விமானாத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விமானம் புறப்பாடு பற்றிய அறிவிப்பை விமானி அறிவித்த பின்னரும் ஆந்திர அமைச்சர் ஒருவர் அவருடைய செல்போனை அணைக்காமல் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.

விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளைப் பற்றி அவர் கவலைபடாமல் அவர் பேசிக்கொண்டே இருந்தாராம். ஸ்ருதிஹாசனும் அவரிடம் செல்போனை அனைத்து வைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் யார் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லையாம். 

இதனைத் தொடர்ந்து இருவருக்குமிடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அந்த அமைச்சர் சில கடுமையான வார்த்தைகளை பேசியதாகவும், அதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ருதிஹாசன் அழ ஆரம்பித்து விட்டதாக சொல்கிறார்கள். அதன் பின் விமான பணிப்பெண் வந்து ஸ்ருதிஹாசனை சமாதனப்படுத்தியதாக தெரிகிறது. 

இந்த விவகாரம் தற்போது டோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top