↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad 2015ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடர் முந்தைய உலகக்கிண்ணப் போட்டிகளோடு ஒப்பிடும் போது வித்தியாசமாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் கூறியுள்ளார்.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் வருகிற 14ம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் மார்ச் 29ம் திகதி வரை நடைபெறுகிறது.
உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த உலகக்கிண்ணத் தொடர் முற்றிலும் வித்தியாசமாக இருக்க போவதாக சச்சின் கூறியுள்ளார்.
மேலும், மாற்றம் செய்யப்பட்ட விதிமுறைகள், டி20 கிரிக்கெட்டின் தாக்கம், வீரர்களின் புதுமையான யுக்திகள் இந்த உலகக்கிண்ணப் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும், போட்டிகள் மிகவும் சவால் நிறைந்ததாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top