↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சமீபகால நடிகைகளில் அருந்ததி புகழ் அனுஷ்காதான் அதிரடி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆக்சன் ஹீரோக்களுக்கு இணையாக 
வெயிட்டான கதாபாத்திரங்களை பந்தாடிக்கொண்டிருக்கும் அவரது திறமைக்கு சவாலாக அமைந்திருக்கும் படம்தான் ராணி ருத்ரம்மாதேவி. அந்த படத்தில் வாள் சண்டை குதிரையேற்றம் என்று மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அனுஷ்கா, பாகுபாலியிலும் ஒரு வெயிட் ரோலில் நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, இப்போது ஹன்சிகாவும் விஜய்யுடன் நடிக்கும் புலி படத்தில் வாள் சண்டை போடும் இளவரசி வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த வரிசையில், தமன்னாவும் தற்போது இடம்பெற்றுள்ளார். பாகுபாலி படத்தில் இரண்டாவது நாயகியாக நுழைந்த இவர் காட்டிய ஆர்வத்தைப் பார்த்து வாள் சண்டை காட்சிகளிலும் நடிக்க சொன்னாராம் அப்பட டைரக்டரான ராஜமவுலி. அதைக்கேட்டு, வாளை என்னால் தூக்கவே முடியாதே. பிறகெப்படி சண்டை போடுவது என்று மிரண்டு ஓடிய தமன்னாவை, முயற்சி செய்தால் உன்னாலும் முடியும் என்று நம்பிககை ஊட்டி இப்போது அவரையும் அனுஷ்கா ரேஞ்சுக்கு வாள் சண்டை போட வைத்துள்ளாராம் ராஜமவுலி.

அதையடுத்து, எனக்கு கவர்ச்சி நடனம் ஆடத்தான் தெரியும் என்று இத்தனை நாளும் நினைத்திருந்தேன். ஆனால் ராஜமவுலி எனக்குள் இருந்த ஆக்சன் தமன்னாவை வெளியே கொண்டு வந்து விட்டார். அதனால் இனிமேல் கவர்ச்சிக்கு இணையாக ஆக்சனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறேன் என்று கூறி வருகிறார் தமன்னா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top