↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
திருநெல்வேலி மாவட்டத்தில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாலிபருக்கும், நாய்க்கும் திருமணம் நடந்தது.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று இந்து அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் காதலர் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் காதலர் தின சின்னங்களை தீவைத்து எரித்து, அதனை சாக்கடையில் கரைக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.

மேலும், இந்து மக்கள் கட்சி சார்பில் உடையார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நூதன போராட்டம் நடைபெற்றது.
அப்போது ஒரு நாய்க்கும், ஒரு வாலிபருக்கும் திருமணம் செய்து வைப்பது போன்று போராட்டம் நடத்தி காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top