↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஒடிசாவில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் மாணவிகளை நிர்வாண புகைப்படம் எடுப்பதால் 60 மாணவிகள் வெளியேறியுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் கஸ்தூரிபா காந்தி பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது.
இதனோடு அமைக்கப்பட்ட விடுதியில், சுமார் 80 க்கும் அதிகமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு பள்ளியின் சார்பில் சுற்றுலா சென்றபோது பள்ளியின் கணக்காளர், மாணவிகளை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
இதற்கு, விடுதி சமையல்காரரும் உதவி செய்திருக்கிறார். இந்த விவரம் மாணவிகளுக்கு அப்போது தெரியவில்லை.

இந்நிலையில் ஓராண்டுக்கு பின்னர் நிர்வாண புகைப்படம் குறித்த தகவல்கள் மாணவிகளுக்கு கிடைத்தது.
அதன்பேரில், பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூர்ணாவிடம் அவர்கள் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் பள்ளியின் கணக்காளர், சமையல்காரர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து 60 மாணவிகள் விடுதியில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 6-8 வகுப்பு படிக்கும் மாணவிகள் ஆவார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top