↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
shruti haasan, nayantharaதற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா.



எனக்கு நம்பர்-ஒன் மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. இப்போது மார்க்கெட்டில் இருக்கிற நடிகைகளில் நானும் ஒருவர் அவ்வளவுதான் என்று நயன்தாரா கூறினாலும் தான் நடிக்கும் படங்களில் தனக்கு போட்டியாக இருக்கும் நடிகைகள் இருந்தால் அந்த படத்திலிருந்து தான் விலகி விடுவேன் என்று அதிரடியாக கூறிவிடுவார். சூர்யா நடிக்கும் மாஸ் படத்தில் இதுதான் நடந்தது. தமிழில் முன்னணியில் இருக்கும் நான் எமியை விட சிறிய ரோலில் நடித்தால் என் இமேஜ் போய் விடும் என்று நயன் கூறியதால்தான் மாஸ் படத்திலிருந்து எமியை ஏறக்கட்டி விட்டனர்.
நயன்தாராவுக்கு இப்போது ஸ்ருதிஹாசன்தான் பெரிய தலைவலியாகியிருக்கிறார். காரணம், பூஜை படத்துக்குப் பிறகு விஜய்யுடன் புலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கின்றனர். கோலிவுட்டின் முன்னணி நாயகியாக இருக்கும் ஹன்சிகாவும் இந்த படத்தில் நடிக்கிறார். எனவே ஸ்ருதி ஹாசன் டபுள் ஹீரோயின் சப்ஜட்டிற்கு எந்த கெடுபிடியும் பண்ணாததால் மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அந்த முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு ஏற்கனவே நயன்தாரா தூது அனுப்பி வந்தார். தற்போது அந்த வாய்ப்பு ஸ்ருதி பக்கம் திரும்பியுள்ளதால் நயன்தாரா கடும் அதிர்ச்சியடைந்துள்ளாராம். கைநிறைய படங்கள் இருந்தபோதும், முன்னணி நடிகர்களின் படங்கள் தனக்கு வருவது குறைந்து விடுமோ என்ற அச்சமும் நயன்தாராவிற்கு அதிகரித்துள்ளதாம். எனவே இதுவரை தமிழில் மட்டும் கதை கேட்டு வந்த நயன்தாரா தெலுங்கு பக்கமும் தான் கவனத்தை திருப்பியுள்ளாராம்.
விஜய், அஜித் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்களுக்கு இரண்டு ஹீரோயின்கள் நடிக்க வைக்கப்போவதாக தகவல் வெளியாகியது குறிப்பிடதக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top