↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad லிங்கா வெளியான நாளிலிருந்தே பல பிரச்னைகளை சந்தித்துக்கொண்டு வருகிறது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துகள் அவர் படம் வெளியாகும் முன்பு மட்டும் இடம் பெறுவதாகவும், அது படத்தை வியாபாரம் ஆக்கும் தந்திரம் என்றும் ரஜினிகாந்தை வசை பாடினர்.

இப்பொழுது லிங்கா படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், படம் பார்த்தவிட்டு வந்த ரசிகர்கள் ஏன்தான் படத்தை பார்த்தோம் என்று இருக்கிறது..

ஒரு கட்டத்துக்கு மேல் தியேட்டரில் உட்காரவே முடியவில்லை என்று ரசிகர்கள் மனக்கொதிப்பை வெளியிட்டனர். 
நல்ல டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் வீணாக இப்படி ஒரு படத்தை டைரக்ட் செய்து ரசிகர்களின் பணத்தை விரயமாக்கிவிட்டாரே என வருத்தப்படுகின்றனர். என்றாலும் ரஜினி ரசிகர்கள் படத்தை ஆஹா.. ஓஹோ வென கொண்டாடுகிறார்கள்.

படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் ஊடகங்களும் லிங்கா படத்தை ரசிகர்கள் நொங்கு நொங்கு என அடிக்கத் தொடங்கிவிட்டனர். இன்னும் இரண்டு நாளைக்கு லிங்கா தியேட்டரில் ஓடும் என்பதே கேள்வி குறி என திரையரங்கு அதிபர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ரஜினிக்காக, அனுஸ்காவுக்காக லிங்கா படம் நூறு நாளை தாண்டி ஓடும் என ஒரு தரப்பு சங்கூதி முழங்கி கொண்டிருக்கிறது.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top