↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கடமையில் கண்ணாக இருக்கும் ஹன்சிகா - Cineulagam


சினிமாவில் அறிமுகமான குறுகிய காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார் ஹன்சிகா. இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் செம ஹிட்.
ஹன்சிகாவின் இந்த வெற்றிகளுக்கு அவரது அதிர்ஷ்டமா காரணம்? இதற்கு சமீபத்தில் ஹன்சிகா பதில் அளித்துள்ளார்.
அரண்மனை படம் திரையுலகில் ஒரு நல்ல இடத்தை தந்துள்ளது. என்னுடைய திறமை மேல் நம்பிக்கை கொண்டு அந்த கதாபாத்திரத்தை சுந்தர்.சி சார் எனக்கு அளித்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர், தொடர்ந்து தன்னுடைய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் எனக்கு வழங்கி வருகிறார்.
விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் ஆம்பள படம் நட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள இப்படம் ஏற்ற படமாக இருக்கும்.
டிசம்பரில் வெளிவர இருக்கும் ‘மீகாமன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான படமாக இருக்கும். நான் மிகவும் எதிர்பார்க்கும் ‘வாலு’ எனக்கு மிகப் பொருத்தமான படமாகும். மிகவும் துடிப்பான வலிமையான பாத்திரம்.
இதற்கெல்லாம் மேலே விஜய் சாருடன், சிம்பு தேவன் இயக்கதில் நடிக்கும் பிரம்மாண்டமான படைப்பு.
இந்த படத்தில் நான் இளவரசியாக நடிக்கிறேன். சிலர் எனக்கு அதிர்ஷ்டம் என்கின்றனர்.
கடின உழைப்புடன் விடா முயற்சி இருந்தால் வெற்றி கிட்டும். என்ன நடந்தாலும், நான் என் கடமையில் கண்ணாக இருப்பேன். இவ்வாறு பதில் கூறியிருக்கிறார் நடிகை ஹன்சிகா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top