↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை 1991-92 மற்றும் 1992-93ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யவில்லை. 1993-94ம் ஆண்டுக்கான ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் தனிப்பட்ட வருமான கணக்கையும் தாக்கல் செய்யவில்லை' என்று ஜெயலலிதா, சசிகலா மீது வருமானவரித் துறையினர் 1996-ம் ஆண்டு எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/egmore-court-continue-jayalalithaa-s-income-tax-case-213073.html

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top