கனடாவில் ஒரே நாளில் நடைபெற்ற பாலியல் சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் டொரண்டோவில் உள்ள பாட்ரிக் என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இவரை பலாத்காரம் செய்த நபர் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருப்பார் என்றும் அழுக்கு நிறைந்த முடியுடன் இருப்பார் என அடையாளம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது சம்பவமாக ரோஜர் சென்டர் என்ற பகுதியில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றின் படிக்கட்டில் 22 வயது இளம்பெண் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நபர்கள் குறித்தும் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 416-808-5204 அல்லது 416-222-8477 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ள டொரண்டோ பொலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.