↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


கடந்த சில நாட்களுக்கு முன்னர் புட்பாய்சன் காரணமாக உடல்நலமின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த உலக நாயகன் கமல்ஹாசன், தற்போது படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறிய விபத்து காரணமாக மீண்டும் கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் கமல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோகன்லால், மீனா நடித்த த்ரிஷ்யம் என்ற படத்தின் ரீமேக்கில் நடித்து வரும் கமல்ஹாசன், நேற்று ஒரு சண்டைகாட்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். போலீஸாக நடிக்கும் கலாபவண்மணி, கமல்ஹாசனை அடிப்பது போன்றும் அப்போது அவருடைய மூக்கு வீங்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

இந்த காட்சியில் வீங்கிய மூக்குடன் நடிக்க, கமல்ஹாசனுக்கு மூக்கின் உள்ளே ரப்பர் ஒன்று பொருத்தப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த ரப்பர் துண்டு கமல்ஹாசனின் மூக்கின் உள்ளே சென்றதால் அவரால் மூச்சுவிட முடியவில்லை.

இதனால் படக்குழுவினர் பெரும் பதட்டம் அடைந்தனர். உடனடியாக கமல்ஹாசன் படப்பிடிப்பு நடந்த தொடுபுழா அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சில நிமிட சிகிச்சைக்கு பின்னர் கமல்ஹாசனின் மூக்கின் உள்ளே இருந்த ரப்பர் துண்டு வெளியே எடுக்கப்பட்டது. இதன்பின்னர் கமல்ஹாசனுக்கு சில முதலுதவி செய்து அவரை டிஸ்சார்ஜ் செய்தனர்.

தற்போது மீண்டும் பாபநாசம் படப்பிடிப்பு தொடர்ந்து தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top