↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற கதாநாயகிகளில் ஒருவர் தான் ஜோதிகா. சிம்ரன், மீனா, ரம்பா என முன்னணி கதாநாயகிகளின் பிடியில் இருந்த கோலிவுட்டில், வாலி படத்தில் லேசாக எட்டிப்பார்த்தார் இவர்.

அவர் வந்து போன சில நிமிடங்களேயே அவர் முட்டை கண்ணில் மொத்தமாய் விழுந்தார்கள் இளைஞர்கள். இதை தொடர்ந்து இயக்குனர் வசந்த் இயக்கத்தில் ‘சூர்யாவிற்கு’ ஜோடியாக பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானார் ஜோ.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு நிரந்தர ‘முகவரி’ கிடைத்தது. அதை தக்க வைத்து கொண்ட இவருக்கு குஷி, ரிதம், சிநேகிதியே, 12பி, ஸ்டார், வேட்டையாடு விளையாடு என வரிசையாக படங்கள் குவிய ஆரம்பித்துவிட்டது.

சூப்பர் ஸ்டாரில் ஆரம்பித்து இன்று அவர் பதவிக்கு போட்டி போடும் லிட்டில் சூப்பர் ஸ்டார் வரை நடித்து தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத நம்பர் 1 இடத்தில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் இருந்தார்.

பின் நடிகர் சூர்யா மீது கொண்ட காதலால் அவரையே திருமணம் செய்து கொண்டு அழகான இல்லற வாழ்வில் இணைந்தார். கதாநாயகி என்றாலே மார்க்கெட் இழந்து தான் திருமண பந்தத்தில் இணைவார்கள் என்பது தமிழ் சினிமாவின் விதி.

ஆனால் இவர் நடித்த கடைசி படமான மொழி படம் கூட மாபெரும் வெற்றியடைந்து அப்படத்திற்காக அந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஸ்டேட் அவார்டை வாங்கினார். இவர் தான் வாழ்நாள் கதாநாயகனான சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல், உயிர்லேயே கலந்து போன்ற படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் எக்ஸ்பிரஸனை அடித்து கொள்ள இன்று வரை தமிழ் சினிமாவில் ஒருவரும் இல்லை, இப்படி ஒரு தாரகையை நாம் இத்தனை நாள் சினிமாவில் பார்க்காமல் இருந்த ஏக்கத்தை புரிந்து கொண்ட அவரே, தற்போது HOW OLD ARE YOU? என்ற மலையாள ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இதை விட மிகப்பெரிய பிறந்தநாள் ட்ரீட் வேறு என்ன வேண்டும்? அந்த வகையில் இப்படி தன் நடிப்பால் திரையுலகையே ஆட்சி செய்த ஜோதிகா அவர்களுக்கு ‘சினி உலகம்’ சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top