↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியிருந்தும் இன்றே அவர் சிறையில் இருந்து விடுதலையாவது கடினம் என்கிறது சட்ட நிபுணர்கள் தரப்பு. ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பு தனது வாதத்தை முன் வைத்தது. குறிப்பாக, ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காண்பித்து, அவரை ஜாமீனில் வெளியே விட வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் பாலி நாரிமன் கேட்டார்.

ஏற்கனவே பரப்பன அக்ரஹாரா சிறை மருத்துவர்களிடமிருந்து தேவைப்படும் மருத்துவ ஆவணங்களை ஜெயலலிதாவின் வக்கீல்கள் பெற்றதால், அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அரசு வக்கீல் இல்லாமலேயே விசாரணையை எதிர்கொண்ட இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. ஆனால் அந்த தீர்ப்பின் பிரதி, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். சிறப்பு நீதிமன்றம் அதை பரிசீலித்து ஜாமீனுக்கு தேவையான நடைமுறைகளை மேற்கொண்ட பிறகு, பெங்களூர் மத்திய சிறைச்சாலைக்கு ஆர்டர் அனுப்பும். அந்த ஆர்டர் மத்திய சிறை அதிகாரிகளின் கைகளுக்கு சேர்ந்த பிறகே ஜெயலலிதாவை விடுதலை செய்ய முடியும். எனவே சிறப்பு நீதிமன்றம், அங்கிருந்து சிறை என இந்த அலைச்சலுக்கு கால அவகாசம் தேவைப்படும். ஆனால் கோர்ட் மற்றும் சிறை நிர்வாகம் மாலை 6 மணியுடன் அலுவலை முடித்துக்கொள்ளும். எனவே இன்று மாலைக்குள் ஆர்டர் சிறையை சென்றடையாவிட்டால் இன்று ஜெயலலிதா விடுதலையாவது சந்தேகமே. இன்று மாலைக்குள் உச்சநீதிமன்ற ஆர்டர் சிறைக்கு சென்று சேராது என்றே தெரிவதால் நாளை மதியம்தான் ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியே வர முடியும். 

ஒருவேளை இன்றே ஆர்டர் காப்பி வந்தாலும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளதால் இன்றே அவரால் சுப்ரீம் கோர்ட் ஆர்டரை பரிசீலிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பெங்களூர் திரும்பி வந்த பின்னரே ஜெயலலிதா தரப்பின் ஆவணங்களை ஏற்றுக் கொண்டு அவரை சிறையிலிருந்து வெளியே விட உத்தரவிடுவார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top