↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வேளையில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது. ஜெயலலிதாவுக்கு நாளையே ஜாமீன் கிடைக்குமா இல்லை விசாரணை தள்ளிப் போகுமா என்ற நிலையில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து மனுதாரர் என்ற முறையில் என்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மீது முதன்முதலில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்தவர் சாமி. மேலும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க விட மாட்டேன் என்று கூறி வந்தார் சாமி. இந்நிலையில் தான் அவர் நாளை ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது இன்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top