↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

'நான் ஈ' பட புகழ் எஸ்.எஸ்.ராஜமவுலி பிரமாண்டமாக இயக்கியுள்ள 'பாஹுபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிராபிக் காட்சிகள் மற்றும் எடிட்டிங், பின்னணி இசை கோர்ப்பு ஆகிய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர் அமைக்கும் பணியை இயக்குனர் ராஜமவுலி மும்பையை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றுக்கு கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மிகவும் தரமான திரைப்பட போஸ்டர்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆந்திராவிலேயே இருக்கும் நிலையில் ராஜமவுலி இந்த பணியை மும்பையில் உள்ள 'மார்ச்சிங் ஆண்ட்ஸ்' (Marching Ants) என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்ற காரணத்தாலும், சர்வதேச அளவில் இந்த போஸ்டர்கள் புகழ்பெற வேண்டும் என்ற காரணத்தாலும் எஸ்.எஸ்.ராஜமவுலி இந்த பணியை மும்பை நிறுவனத்திடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மும்பை நிறுவனம் போஸ்டர் அமைத்து தரும் பணியோடு, இந்த படத்தை விளம்பரப்படுத்தவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top