↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக் கிண்ண போட்டியில் இந்தியை அணியை வெற்றி பெற்று வரலாற்று சாதனையை பதிவு செய்ய பாகிஸ்தான் அணிக்கு நல்ல சந்தர்ப்பம் அமைந்துள்ளதாக அவ்வணியின் முன்னாள் அணித் தலைவர் ஸாஹிர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘‘உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன். இம் முறை அரையிறுதி வாய்ப்பை பெறும் 4ஆவது அணியாக இந்தியா அல்லது பாகிஸ்தான் இருக்கும்.
தொடக்க லீக் ஆட்டம் இவ்விரு அணிக்கும் மிகவும் முக்கியமானது. இது உண்மையிலேயே பரபரப்பு நிறைந்ததாக இருக்கும். உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்தியாவை வெல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த சோகத்துக்கு முடிவு கட்ட பாகிஸ்தானுக்கு இது பொன்னான வாய்ப்பாகும்.
அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தொடர்ந்து தடுமாறிக் கொண்டிருப்பதால், அதை பாகிஸ்தான் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் இறங்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தானை விட நெருக்கடி அதிகமாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top