↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'நண்பேண்டா' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் 22ஆம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'மான் கராத்தே' படத்தை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கவிருக்கும் இந்த படத்தில் மிக முக்கியமான ரோல் ஒன்றில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள இன்னொரு படமான 'இதயம் முரளி' திரைப்படத்தின் படப்பிடிப்பும் வரும் ஏப்ரல் முதல் தொடங்கவுள்ளது. 'என்றென்றும் புன்னகை' அகமது இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மதி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தில் ஹன்சிகா, உதயநிதிக்கு ஜோடியாக மீண்டும் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top