↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

'இரண்டாம் உலகம்' தோல்விக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் விறுவிறுப்பான ஒரு காதல் கதையை தயார் செய்து, அதில் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடித்த சிம்பு-த்ரிஷாவை ஜோடியாக்கி புதிய படம் ஒன்றை இயக்க முயற்சி மேற்கொண்டார். படத்துக்கு கூட அலைவரிசை என்று தலைப்பு வைத்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிப்பு வெளியானது.

ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் ஆரம்பிக்கப்படவில்லை. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, காரணம் எதுவும் சொல்லாமலேயே படத்தை கைவிட்டனர். இந்நிலையில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவிருப்பது இப்போது உறுதியாகியுள்ளது. இதை தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டரில் கூறியதாவது, ''அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி சிம்பு நடிக்க இருக்கிறார். இந்தப் படம் மிக சிறப்பானதாக அமையும். சகோதரர்களுக்கு வாழ்த்துகள்'' என்று அதில் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கிய சமீபத்திய படங்கள் பாக்ஸ் ஆஃபீசில் வெற்றி பெறாததால், இப்படத்தை ஒரு வெற்றிப்படமாக தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் செல்வராகவன், அதற்கேற்ற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்திருக்கிறாராம். மேலும் படத்தின் நாயகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் யார் என்பது பற்றிய விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அலைவரிசை படத்தில் ஒப்பந்தமான த்ரிஷாவும், யுவனும் படத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top