↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நாங்கள்தான் காந்தியை சுட்டுக் கொன்றோம். அதேபோல கெஜ்ரிவாலையும் சுட்டுத் தள்ளுவோம் என்று பேசி வந்த ஒரு சாமியார் வேட்பாளர் டெல்லி சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவியுள்ளார். இவருக்கு வெறும் 373 ஓட்டுக்கள்தான் கிடைத்துள்ளன. அகில இந்திய இந்து மகாசபா சார்பில் புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட்டவர் சுவாமி ஓம்ஜி. இவர் யார் என்றே நிறையப் பேருக்குத் தெரியவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தின்போது இவரது பேச்சு எல்லாமே வெறித்தனமாகவே இருந்தது.

பாஜக தொப்பியைப் போட்டபடிதான் இவர் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டார். கெஜ்ரிவாலை இவர் தேச விரோதி என்றும் பேசினார். பிரசாரத்தின்போது இந்த ஓம்ஜி பேசுகையில், பாஜகதான் எனது கட்சி. அக்கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்களை காங்கிரஸும், ஆம் ஆத்மியும் பறிக்க முயல்கின்றன. அதைத் தடுக்கவே நான் தேர்தல் களத்தில் குதித்துள்ளேன். ஓஜஸ்வி கட்சியின் உலகளாவிய தலைவர்தான் நான். இக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஆசாராம் பாபு மற்றும் நாராயண் சாய் ஆகியோர் ஆவர். இருவரும் சிறையில் இருப்பதால் அக்கட்சியையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.


எனக்காக டெல்லியில் 10 லட்சம் தொண்டர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கெஜ்ரிவால், காங்கிரஸுக்கு வர வேண்டிய ஓட்டுக்களைத் தடுக்கவே நான் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். பாஜக வேட்பாளர் நூபுர் சர்மா வெல்ல வேண்டும் (ஆனால் தோற்றுப் போய் விட்டார்). கெஜ்ரிவாலுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அவர் தோற்றுப் போய் விடுவார். தேசதுரோகி கெஜ்ரிவால் குறித்து நான் எழுதிய புத்தகம் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது. 

இதன் காரணமாகவே கடந்த லோக்சபா தேர்தலில் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை கெஜ்ரிவால் வீட்டுக்குப் போய் நானே கொடுத்து அவரது கன்னத்திலும் அறை விட்டேன். நான் பரசுராமரின் அவதார். நான் மணி அடிக்கும் சாமியார் அல்ல, துரோகிகளை சுட்டுத் தள்ளுபவன். நாங்கள்தான் காந்தியை சுட்டோம். கெஜ்ரிவாலையும் நாங்கள் சுட்டுக் கொல்வோம் என்றார் ஓம்ஜி.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top