↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆர்யா வேண்டாம், அஜித் தான் வேண்டும்! அடம்பிடிக்கும் பிந்து மாதவி - Cineulagam


வெப்பம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பிந்து மாதவி. இவர் கடைசியாக, ''ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்'' படத்தில் நடித்தார். இப்போது, ''தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்'', ''சவாலே சமாளி'' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில், ''தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்'' படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த பிந்து மாதவி பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பளிச் பளிச் என மனதில் உள்ளதை அப்படியே தெரிவித்தார். அவர் கூறியதாவது...

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் இயக்குநர் ராம், என்னிடம் இந்த கதையை கூறியபோது மிகவும் பிடித்துபோனது. அதனால் உடன் நடிக்க சம்மதம் சொன்னேன். இந்த படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. கடந்தாண்டு எனது நடிப்பில், ''ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்'' என்ற ஒரே ஒரு படம் தான் ரிலீஸானது. இந்தாண்டு, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் சவாலே சமாளி மற்றும் பாண்டிராஜ் படம்... என மூன்று படங்கள் வௌிவர உள்ளன. 

எனக்கு, அம்மன் போன்ற வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதை எனது கனவு ரோல் என்று கூட சொல்லலாம். இன்றைக்கு சினிமாவில், 13 வயது 14 வயதில் எல்லாம் ஹீரோயின்கள் ஆகிவிடுகிறார்கள், இது ஒரு தவறான விஷயம், 20-22 வயதில் ஹீரோயினாக நடிக்கலாம் என்பது எனது விருப்பம். மேலும் இன்றைக்கு நன்கு படித்தவர்கள் ஹீரோயினாக வருகிறார்கள், இது வரவேற்க தக்க விஷயம்.

வரும் காலங்களில் யார் உடன் நடிக்க போகிறேன் என்பது தெரியவில்லை, ஆனால் நான் இந்த சினிமாவை விட்டு போவதற்குள் ஒரே ஒரு முறையாவது அஜீத் உடன் நடித்து விட வேண்டும், அது எனது சினிமா கனவு. அஜீத்துடன் எதற்காக நடிக்க ஆசைப்படுகிறீர்கள், அவர் நன்றாக பிரியாணி செய்வார் என்பதாலா என்ற கேள்விக்கு அதுவும் ஒரு காரணம், சரி ஆர்யாவும் பிரியாணி செய்வாரா.? அவருடன்... நடிக்கலாமே என்றதற்கு எனக்கு ஆர்யா பிரியாணி வேண்டாம், அஜீத் பிரியாணி மட்டும் தான் வேண்டும் என்றார் பிந்து மாதவி.

மேலும் அவர் பேசுகையில், நானும் ஒருவரை காதலித்தேன், ஆனால் இப்போது கிடையாது. நான் கல்லூரியில் படிக்கும் ஒருவரை காதலித்தேன். ஆனால் அந்த காதல் பிரேக் ஆகிவிட்டது. இதனால் நான்கு-ஐந்து மாதம் அழுது கொண்டே இருந்தேன். அதைவிட்டு வௌியே வர எனக்கு 6 மாத காலம் ஆனது. இன்றைக்கு சினிமாவில் நிறைய புதுமுகங்கள் நடிக்க வந்துள்ளனர். அவர்களில் லட்சுமி மேனன் என்னை மிகவும் கவர்ந்தவர். அவரது எல்லா படங்களையும் நான் பார்த்துள்ளேன், நன்றாக நடிக்கிறார். 

இவ்வாறு பிந்து மாதவி கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top