↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண் தேஜா மீது அவரது பக்கத்துவீட்டுகாரர்கள் புகார் அளித்துள்ளனர்.
தெலுங்கில் யவடூ, மகதீரா, ரச்சா போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் ராம் சரண் தேஜா.
இவர் நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்களுக்கு அவர் 'சனிக்கிழமை விருந்து' கொடுத்துள்ளார்.
இந்த விருந்து நிகழ்ச்சி இவரது வீட்டு மொட்டை மாடியில் நடந்துள்ளது.

இதில் ஸ்ரீகாந்த் ரெட்டி மற்றும் நடிகர், நடிகைகள், நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் விடிய விடிய நடந்த இந்த மது விருந்து ஒரே கூச்சலாக இருந்துள்ளதால், இது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒலிபெருக்கியில் சத்தமாக பாட்டுப் போட்டு ஆடிய இவர்களின் விருந்து களியாட்டங்கள் அதிகாலை 4 மணிவரை நடந்துள்ளன
இதனால் தூக்கம் தொலைத்த அக்கம் பக்கத்தினர் பொலிசாரிடம் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், ராம் சரணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top