கத்தி படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் இரண்டு வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். விஜய் புலி படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடாத படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கப்பட்டு விட்டது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. பிறகு பாலிவுட்டின் முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது விஜய்யை மீண்டும் வலைத்து போட்டுள்ளார் சமந்தா. ஆம் விஜய்யின் 59வது படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா. இதன் மூலம் விஜய்யுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேரவிருக்கிறார். மேலும் படத்தில், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. புலி படம் முடிந்தவுடனே தனது 59வது படத்தின் படப்பிடிப்பை தொடங்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.