
ஒரு திரைப்படம் தொடங்குவதற்கு முன்னால் சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது' என்ற விளம்பரம் தியேட்டரில் ஒளிபரப்பப்படுவதை நாம் பார்த்திருப்போம். தற்போது அந்தந்த படத்தின் நடிகர்களே அந்த விளம்பரத்திற்கு குரல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சிகரெட் புகைக்கும் பழக்கம் பெரும்பாலும் ஆண்களிடத்தில் உள்ளதால் அந்த படத்தின் ஹீரோ குரல் கொடுத்து தனது ரசிகர்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தின் ஆபத்தை கூறி வருகின்றனர். ஆனால் 'மல்லி மல்லி ராணி ரோஜு' என்ற தெலுங்கு படத்தை இயக்கி வரும் இயக்குனர் கொஞ்சம் வித்தியாசமாக அந்த படத்தின் ஹிரோ சர்வானந்த்தை சிகரெட் விளம்பரத்திற்கு குரல் கொடுக்க வைக்காமல், படத்தின் ஹீரோயின் நித்யா மேனனை குரல் கொடுக்க வைத்துள்ளார்.
புகை பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்காக இதை செய்தாரா? அல்லது நடிகையின் அறிவுரையை ஆண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற அர்த்தத்தில் இதை செய்தாரா? என்பதை படக்குழுவினர்தான் விளக்க வேண்டும்.
நித்யா மேனன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'ஓகே கண்மணி, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் முனி 3 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.