↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகை திரிஷா தற்போது அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’, ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’ மற்றும் மணிமாறன் இயக்கும் பெயரிடப்படாத படம் போன்றவற்றில் நடிக்கிறார்.

இவற்றில் ‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்த படம் அடுத்த மாதம் அல்லது பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர திரிஷா, ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இதுவும் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் “திரிஷாவுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அவர் ஓய்வின்றி படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வந்தார். இரவு-பகல் என படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்ததால் சோர்வடைந்தார். காய்ச்சலும் ஏற்பட்டது. எனவே, அவரால் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளார். தற்போது மருத்துவர் அறிவுரைப்படி வீட்டில் கடந்த 10 நாட்களாக படுக்கையிலேயே ஓய்வு எடுத்து வருகிறார் திரிஷா”  என்று கூறப்பட்டது.


உண்மையில், திரிஷாவுக்கும், தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இதனையொட்டியே திரிஷா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top