↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சிபிராஜ், அருந்ததி நடித்துள்ள படம் நாய்கள் ஜாக்கிரதை. சில வருடங்களாக மார்க்கெட்டை இழந்த சிபிராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வித்தியாசமான கதையில் நடித்துள்ளார்.

இந்த படத்தில சிபிராஜ்தான் ஹீரோவா என்று கேட்டால், கதைதான் ஹீரோ என்கிறார்கள். அதிலும் அந்த படத்தில் நடித்திருக்கும் நாய்க்குத்தான் முதல் முக்கியத்துவமாம். அதோடு அந்த நாய்க்கு படத்தில் இரண்டு பாடல்கள்கூட உள்ளதாம்.

இதை சமீபத்தில் நாய்கள் ஜாக்கிரதை படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தபோது தெரிவித்த அப்பட நாயகியான அருந்ததி, எனக்குத்தான் ஒரு பாட்டுகூட இல்லை என்று ரொம்பவே பீல் பண்ணினார். கண்ணீர் விடாத குறைதான் ஆனபோதும், படத்தின் கதை என்னைச் சுற்றித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் ஆறுதலாக சொல்லிக்கொண்டார்.

ஆனால், அதையடுத்து பேசியவர்கள், கதாநாயகியை மையமாக வைத்து உருவான பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதன்பிறகு அவர்களது மார்க்கெட் எகிறியிருக்கிறது என்று பேசியவர்கள், உதாரணமாக நூறாவது நாள், வால்டர் வெற்றிவேல் ஆகிய படங்களை சுட்டிக்காட்டி அருந்ததியை உற்சாகப்படுத்தினர்.
.............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top