கத்தி படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய்.சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, பண்ணையூர் அருகே போடப்பட்டுள்ள மாபெரும் செட்டில் தொடங்கப்பட்ட இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 45 நாட்கள் தொடர்ந்து நடக்கவிருக்கிறது. விஜய்யுடன், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்திற்கு பிறகு விஜய் ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டார் இயக்குநர் அட்லீ. இந்த படத்தை தயாரிக்கப்போவது கலைப்புலி எஸ்.தாணுவாம். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாராம்.
இப்படம் பக்கா ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகப்போகிறதாம். மேலும் இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த வருடம் இறுதியில் அல்லது 2016 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.விஜய் 59 படத்திற்கு தொழில்நுட்ப கலைஞர்கள் எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு ஜார்ஜ் வில்லியம்ஸ்.
.............................................................................................................
https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.