↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர்-ல் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் துவங்கி, நடைபெற்று வருகிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தை,விஜய் படங்கள் அனைத்தையும் கேரளாவில் விநியோகம் செய்துவரும் தமீன் பிலிம்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

300 நடனக் கலைஞர்களுடன் விஜய், ஹன்சிகா நடனமாடி வரும் பாடலை காட்சிப்படுத்தி வருகிறார்கள். அப்பாடல் முடிந்தவுடன் சண்டைக்காட்சி ஒன்றையும் படமாக்க இருக்கிறார்கள். அரங்கு மற்றும் உடைகள் பிரம்மாண்டமாக இருப்பதாக ஹன்சிகா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களுப் பிறகு, தமிழ்த் திரையுலகில் இப்படத்தின் மூலம் ஸ்ரீதேவி மறுப்பிரவேசம் செய்கிறார்.
இப்படத்தில் ஸ்ரீதேவிக்கான உடைகளை இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ரா வடிவமைக்க இருக்கிறார். இதனை அவரது ட்விட்டர் தளத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.


மேலும், இப்படத்தில் ‘கத்தி’ படம் போலவே இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். ராஜா காலத்து வேடத்தில் தோன்று விஜய்க்கு ஹன்சிகா ஜோடியாகவும், இன்னொரு விஜய்க்கு ஸ்ருதிஹாசன் ஜோடியாகவும் நடிக்க இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top