↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கைவசம் அரை டஜன் படங்களை நயன்தாரா வைத்திருந்தபோதும், அவரது திறமைக்கு தீனி போடும் வெயிட்டான வேடங்கள் எதுவுமே 
கிடைக்கவில்லை என்றொரு மனக்குறை அவருக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறதாம். அதனால்தான், தற்போது மலையாள இயக்குனர் சித்திக் சொன்ன ஒரு வேடம் அவரை வெகுவாக கவர்ந்திழுக்க உடனே அந்த படத்தில் கமிட்டாகி விட்டார் நயன்தாரா.

அதைத் தொடர்ந்து, அனுஷ்கா நடிப்பது போன்ற சரித்திர கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவருக்கு இப்போது கார்த்தி நடிக்கும் காஷ்மோரா என்ற படத்தில் ஒரு சரித்திர கதாபாத்திரம் கிடைத்துள்ளதாம். தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்த பிறகு மீண்டும் சரித்திர கதாபாத்திரத்தில் நடிக்கிறாரர் நயன்தாரா.

அதனால், மற்ற படங்களில் கமிட்டாகும்போது கால்சீட்டை 5 நாள், 10 நாள் என்று துண்டு துண்டாக கொடுக்கும் நயன்தாரா, இந்த படத்திற்கு மொத்த கால்சீட்டையும் எண்ணிக்கொடுத்திருக்கிறாராம். காரணம், சரித்திர கதைகளில் நடிக்கும்போது அதன் பீல் மாறக்கூடாது. ஒரே நேரத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் கவனத்தை திருப்பினால் இந்த சரித்திர வேடம் கெட்டுப்போய் விடும் என்று சொல்லியே கால்சீட் கொடுத்தாராம் நயன்தாரா. அவரது இந்த ஈடுபாடு மேற்படி படக்குழுவை ஆச்சர்யப்படுத்தி உள்ளதாம்.

..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top