விஜயகாந்த் தன் இரண்டாவது மகன் சண்முக பாண்டியனை சகாப்தம் என்ற திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.
இதில் நாயகிகளாக நேகாவும், சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன், பவர்ஸ்டார் சீனிவாசன், தேவயாணி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன், பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் சவ்ரவ் என்ற இந்தி வில்லனும் அறிமுகமாகிறார். சுரேந்திரன் இயக்க படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். பூபதி ஒளிப்பதிவு செய்கிறார்.
சகாப்தம் படத்திற்காக சில தினங்களுக்கு முன் மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் கதாநாயகன் சண்முகப்பாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15 போட்டுகளில் இருநூறு துணை நடிகர்களோடு சேர்ந்து நடுக்கடலில் சண்டைக் காட்சியில் பங்கேற்றார். அந்த சண்டைக் காட்சி ஐந்து கேமிராக்கள் வைத்து மிக பிரமாண்டமாக படமாகப்பட்டது.
மேலும் பிரமாண்டம் சேர்பதற்காக ஹெலிகாப்டர் மூலமாகவும் இந்த சண்டை காட்சியை படமாக்கியுள்ளார்கள். இந்த சண்டைக்காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்றது. அந்த சண்டைக் காட்சியை தாய்லாந்தை சேர்ந்த பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் கேச்சா சண்டை அமைக்க படமாக்கப்பட்டது.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.